இலங்கை
யாழில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

யாழில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!
நேற்றிரவு, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மற்றொரு கொலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 44 வயதுடைய மடத்தடி, இருபாலை பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மடத்தடி பகுதியில் சந்தேகநபர்கள் மறைந்திருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[ஒ]