Connect with us

சினிமா

“சாப்பாட்டுக்கு வழியில்லாம இருந்திருக்கேன்..” நடிகர் தனுஷ் வருத்தம்…

Published

on

Loading

“சாப்பாட்டுக்கு வழியில்லாம இருந்திருக்கேன்..” நடிகர் தனுஷ் வருத்தம்…

புதுப்பேட்டை படத்தின் மூலம் சாதாரண நடிகராக அறிமுகமாகி இன்று பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்து இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது இயக்கம் தயாரிப்பில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். இவரது இயக்கத்தில் வெளியாகிய பவர்பாண்டி ,ராஜன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தற்போது நாகசைதன்யா மற்றும் ராஷ்மிக்கா மந்தனாவுடன் இணைந்து குபேரா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்வில் தனது வாழ்க்கை குறித்த பல விடயங்களை தனுஷ் கூறியுள்ளார். மேலும் அவர் “உங்களுக்குன்னு இருக்கிறத யாராலையும் எடுத்துக்க முடியாது. நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழி இல்லாம இருந்து இருக்கேன், எல்லாமும் இருந்தும் இருந்திருக்கேன். ஆனா எப்பவும் நான் சந்தோசமா தான் இருக்கேன். ஏன்னா என் சந்தோசத்தை நான் வெளியில தேடுறது இல்ல” எனவும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன