Connect with us

டி.வி

ராதிகாவோட கோபிக்கு கல்யாணமா.? பாக்கியா எடுத்த முடிவு! பயத்தில் நடுங்கிய இனியா.!

Published

on

Loading

ராதிகாவோட கோபிக்கு கல்யாணமா.? பாக்கியா எடுத்த முடிவு! பயத்தில் நடுங்கிய இனியா.!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா இனியாவுக்கு போன் எடுத்து தன்ர பிஸ்னஸில எடுத்த புது பிளான் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து, பாக்கியா கோபியோட வாழ பிடிக்கல என்று சொன்னதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் ஈஸ்வரி ராதிகாவுக்கு போன் எடுத்து மஜு எப்புடி இருக்கா என்று கேட்கிறார். அதைக் கேட்ட ராதிகா நீங்க போன் எடுப்பீங்க என்று நான் எதிர்பார்க்கவே இல்ல என்று சொல்லுறார்.அதனைத் தொடர்ந்து, ஈஸ்வரி இப்பவெல்லாம் நான் அடிக்கடி உன்னை பற்றி நினைக்கிறேன் என்று ராதிகாவிடம் சொல்லுறார். மேலும் கோபி அப்பா கூட கனவில வரும் போது உன்னைப் பற்றி கேட்பாரு என்கிறார். பின் ராதிகா தான் வேலை விஷயமா சென்னைக்கு வந்திருக்கேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து நாளைக்கு நீ பிரீயா இருந்தால் பாக்கலாமா என்று கேட்கிறார் ஈஸ்வரி.பின் செல்வி பாக்கியாட்ட போய் என்ன அக்கா சினிமாவில மட்டும் கூட்டம் வருது நிஜத்தில் கூட்டத்தையே காணோம் என்கிறார். இதனைத் தொடர்ந்து ரெஸ்டாரெண்டில கவுன்சிலர் வந்து பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து சாப்பிட வந்த எல்லாரும் அங்கிருந்து ஓடிப்போகிறார்கள். பின் நிதீஷ் போதைப் பொருள் use பண்ணிட்டு வந்து நிற்கிறதைப் பார்த்த இனியா ரொம்பவே பயப்படுறார். இதனை அடுத்து சுதாகரோட மனைவி சுதாகரைப் பாத்து நிதீஷ் கல்யாணத்துக்குப் பிறகு திருந்திடுவான் என்று நினைச்சேன் ஆனால்  அவன் கல்யாணத்திற்குப் பிறகும் மாறல எல்லாத்துக்கும் காரணம் இனியா தான் என்கிறார். அதுக்கு சுதாகர் நீ தானே அவன் என்ன செய்யுறான் என்று பாக்க வேணும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன