Connect with us

சினிமா

தொடர்ந்து மூன்று மரணங்கள்.. ஹீரோ உட்பட விபத்தில் சிக்கிய 30 பேர்..! என்ன ஆனது?

Published

on

Loading

தொடர்ந்து மூன்று மரணங்கள்.. ஹீரோ உட்பட விபத்தில் சிக்கிய 30 பேர்..! என்ன ஆனது?

கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் காந்தாரா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே, படக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். முதலில் நடிகர் கபில் என்பவர், கர்நாடகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் சவுபர்ணிகா நதியில் மூழ்கி இறந்தார்.இதை தொடர்ந்து மாரடைப்பு காரணமாக ராகேஷ் புஜாரி என்பவர் மரணமடைந்தார். மேலும் சமீபத்தில் விஜூ விகே என்ற நடிகர் ஹோட்டல் ரூமில் இருந்து கிடந்தார். இப்படி தொடர்ந்து மூன்று மரணங்கள் காந்தாரா படக்குழுவின் நடந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை தந்தது.இந்த நிலையில், அண்மையில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் 30 பேர் பயணித்த படகு திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. கர்நாடகா ஷிவமோகா பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.அங்கு ஆழம் அதிகமாக இல்லாத காரணத்தினால் அனைவரும் உயிர் தப்பியுள்ளார். இப்படி தொடர்ந்து பல அசபாவிதங்கள் காந்தாரா படக்குழுவை துரத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன