Connect with us

இலங்கை

கெஹெலியவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

Loading

கெஹெலியவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான்  இன்று (17) உத்தரவிட்டார்.

தலா 1 மில்லியன் ரூபாய் இரண்டு தனிப்பட்ட பிணைகளை விதித்த நீதவான், சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், பிணைதாரர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement

தனது அமைச்சுப் பதவியை முறைக்கேடாக பயன்படுத்தி நியமனங்களை வழங்கியமை, அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே இந்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பணி பெண்ணின் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணைக் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன