Connect with us

சினிமா

வீடியோ எடுத்த புகைப்பட கலைஞர்கள்!! கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகை சமந்தா..

Published

on

Loading

வீடியோ எடுத்த புகைப்பட கலைஞர்கள்!! கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகை சமந்தா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை அடுத்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிய சமந்தா, மும்பையில் செட்டிலாகிவிட்டார்.இதனையடுத்து சமந்தா எங்கு சென்றாலும் அவரை சுற்றி போட்டோ கலைஞர்கள்(paparazzi) சுற்றி வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.இந்நிலையில், சமந்தா ஜிம் உடையில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரை சுற்றி போட்டோ கலைஞர்கள், குட் மார்ன்னிங் மேடம் என்று கூறி, வீடியோ எடுக்க முற்பட்டனர்.அப்போது சமந்தா, கொஞ்சம் நிறுத்துங்கள் என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்கள் குட் மார்ன்னிங் தானே சொன்னார்கள் அதற்கு ஏன் இப்படி கோபடப்பட வேண்டும் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன