இலங்கை
இயந்திர கோளாறால் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

இயந்திர கோளாறால் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
அநுராதபுரம் – பாதெனிய வீதியில் 72ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.