Connect with us

இலங்கை

சுதுமலையில் கோர விபத்து – ஒருவர் சாவு!

Published

on

Loading

சுதுமலையில் கோர விபத்து – ஒருவர் சாவு!

யாழ்ப்பாணம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியிலே நேற்றையதினம் (30) இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ,மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிறப்பு, இறப்பு பதிவாளர் அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

Advertisement

நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் வண்டியில் வரும் போது எதிரே வந்த கார் மோதியதாலேயே இடம்பெற்றுள்ளது.

இதன்  பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவுகை  வண்டி குறித்த இடத்திற்கு வருகை தந்த நிலையில் குறித்த நபரை மருத்தவமனைக்கு கொண்டு சென்ற போதிலும்  அவர் உயிரிழந்துள்ளார்.

நோயாளரை உடனடியாக மருத்தவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அந்த நபரை  காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .  (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன