இலங்கை
வடக்கு மாகாணத்தில் எரிபொருள் நிலையங்களில் இன்றும் தொடர்ந்தது வரிசை!

வடக்கு மாகாணத்தில் எரிபொருள் நிலையங்களில் இன்றும் தொடர்ந்தது வரிசை!
வடக்கு மாகாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று பரப்பப்பட்ட போலித் தகவல்கள் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் நேற்றுமுன்தினம் இரவிரவாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து எரிபொருளை நிரப்பத் தொடங்கினார்கள். இந்த நிலை இன்றும் தொடர்கிறது.
இதேவேளை, நேற்று யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் எரிபொருள் வரிசைகளை அவதானிக்கமுடிந்தது.