உலகம்
சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு!

சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு!
அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
ஒரு அறிக்கையில், அகன்ற உடல் விமானங்களுக்கான சர்வதேச சேவைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை சர்வதேச விமானங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமான நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைக்கப்பட்ட விமான அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது, மேலும் பயணிகளுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மாற்று வழிகளை அறிமுகப்படுத்தவும் ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி, இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது, பயணிகள் உட்பட 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை