இலங்கை
மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக ஏ- 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக குறித்த இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் கொண்டுவந்தமையே காரணமென தெரியவந்துள்ளது.