இலங்கை
உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!
அநுராதபுரத்தில் ஒயாமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் ஒயாமடுவ பொலிஸாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒயாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும், சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒயாமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.