இலங்கை
மயங்கிச் சரிந்து பெண் சாவு!

மயங்கிச் சரிந்து பெண் சாவு!
கோவிலுக்குச் செல்வதற்குத் தயாரான பெண்ணொருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 50வயதுடைய கேதீஸ்வரன் சுசீலா என்ற குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அவர் வலந்தலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.