Connect with us

இலங்கை

இரக்கம் காட்டுங்கள்; காசாவில் மண்ணை உண்ணும் சிறுவனின் கலங்கவைக்கும் காணொளி!

Published

on

Loading

இரக்கம் காட்டுங்கள்; காசாவில் மண்ணை உண்ணும் சிறுவனின் கலங்கவைக்கும் காணொளி!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் காணொளி வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது.அக் காணொளியில் சிறுவன் பேசுகையில்,

Advertisement

காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மணலைச் சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.

காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டாலர். அந்த ஒரு ரொட்டித் துண்டு மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை” என்று பேசியுள்ளார்.

Advertisement

ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம்.  உணவுதான் கிடைப்பதில்லை என தெரிவித்து மண்ணை உண்கிறார்.

இந்நிலையில்  சிறுவனின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன