இலங்கை
கோர விபத்தில் படுகாயமடைந்த அதிகாரிகள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

கோர விபத்தில் படுகாயமடைந்த அதிகாரிகள் ; தமிழர் பகுதியில் சம்பவம்
வாழைச்சேனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மியான்குளம் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (20) விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஓட்டமாவடி இளைஞர்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி, ஓட்டமாவடி பிரதேசசபை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.