Connect with us

இந்தியா

முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து அரசியல் சூழ்ச்சி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

Published

on

pondy ex cm

Loading

முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து அரசியல் சூழ்ச்சி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அரசியல் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி காவல்துறை லஞ்சம் பெற்றுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்கிறார்கள், இதுபோல் அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல். புதுச்சேரி அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் சம்பந்தமான ஆதாரங்களை நிறைய திரட்டி வைத்துள்ளோம், 26-ஆம் தேதி நடக்கும் காங்கிரஸ் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் மனு அளிக்கப்படும்.2026-ல் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்ததும் இந்த ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நிச்சயம் சிறையில் தள்ளுவோம். ஊழலால் மலிந்துள்ள என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா என்ற சூழல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம், ரத்து செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன