Connect with us

இலங்கை

சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எளிய வழிபாட்டு முறை

Published

on

Loading

சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எளிய வழிபாட்டு முறை

சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் பிரதோஷ விரதம், இந்த ஆண்டு ஜூன் 23, 2025 அன்று ஆஷாட கிருஷ்ண பக்ஷத்தில் வரும் பிரதோஷ விரதம் திங்கட்கிழமை வருவதால், இது சோம வார பிரதோஷ விரதம்என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மிக வளர்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருகும். ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

Advertisement

சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷம் எப்படி கிடைப்பதற்கு அரிய பலன்களை தரக் கூடிய மிக முக்கியமான பிரதோஷமோ, அதே போல் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும் மிகவும் முக்கியமானதாகும்.

சிவ பெருமானுக்கும், சந்திரனுக்கும் உரிய திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.

அதிலும் இந்த ஆண்டு வரும் ஜூன் மாதத்தில் வரும் சோமவார பிரதோஷம் ஆனி மாத சிவராத்திரி மற்றும் முருகப் பெருமானுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.

Advertisement

புராணங்களின் படி, பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆழகால விஷத்தை உண்டு உலக உயிர்களை காத்தார் சிவ பெருமான். தங்களுக்கு உதவிய சிவ பெருமானை தேவர்கள் உள்ளிட்டோர் போற்றி, வழிபட்டனர்.

இதனால் உள்ளம் மகிழ்ந்த சிவ பெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடி அனைவருக்கும் காட்சி கொடுத்து, வேண்டிய வரங்களை தந்து அருளிய வேளையே பிரதோஷ வேளையாக வழிபடப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதால் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சூரியன் மறைவதற்கு 72 நிமிடங்களுக்கு முன்பு பிரதோஷ காலம் தொடங்குகிறது.

Advertisement

இந்த நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். பிரதோஷ விரதத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால், ஆன்மீக மற்றும் பொருள் ஆசைகள் நிறைவேறும். முந்தைய பாவங்கள், துன்பங்கள் மற்றும் கவலைகள் நீங்கும்.

பிரதோஷ விரதத்தின் போது பக்தர்கள் சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்கிறார்கள். சிவ லிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய் போன்ற புனித திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். அப்போது “ஓம் நம சிவாய” மற்றும் “மஹா மிருத்யுஞ்சய” போன்ற மந்திரங்களை உச்சரிக்கிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன