இலங்கை
வோல்கர் டேர்க் நடமாட எவ்வித கட்டுப்பாடுமில்லை!

வோல்கர் டேர்க் நடமாட எவ்வித கட்டுப்பாடுமில்லை!
இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் வோல்க்கர் டேர்க் செம்மணி மனிதபுப்தைகுழியை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதிக்குச் செல்வதற்கும். மக்களை “சந்திப்பதற்கும் தடைகள் ஏற்படுத்தப்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது தொடர்பான நாட்டின் நல்லிணக்கத்துக்கான அர்ப்பணிப்புடனான நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புகின்றது. மனிதஉரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கும் தடை எதுவும் விதிக்கப்படாது – என்றார்.