Connect with us

பொழுதுபோக்கு

கல்யாணம் ஆன மறுநாளே இப்படியா? தமிழ் சினிமா மேல் வருத்தம் தான்: நடிகை கனிகா ஓபன் டாக்!

Published

on

Kanikha

Loading

கல்யாணம் ஆன மறுநாளே இப்படியா? தமிழ் சினிமா மேல் வருத்தம் தான்: நடிகை கனிகா ஓபன் டாக்!

2002-ம் ஆண்டு தமிழில் வெளியான ஃபவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து எதிரி ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் நடித்திருந்தார்.  கடைசியான தமிழில் ஓ.கே.கண்மணி படத்தில் நடித்த கனிகா தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் தெலுங்கு கன்னடம் என ஒரு சில மொழிகளில் நடித்துள்ள கனிகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு வெளியான விஜயின் கோட் படத்தில் வில்லன் மோகனின் மனைவியாக கேமியோ ரோலில் நடித்திருந்த கனிகா, சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரது கேரக்டருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.இந்த சீரியலில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா கணவருக்கு பயந்த மனைவியாக சிறப்பாக நடித்து வருகிறார். அவ்வப்போது சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வரும் கனிகா, தற்போது நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமா குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.எனக்கு திருமணம் நடந்த அடுத்த நாளே வந்து இனி நீங்க ஹீரோவுக்கு அண்ணி கேரக்டரில் நடிக்கிறீங்களா? அக்கா கேரக்டரில் நடிக்கிறீங்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு அது வருத்தமாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு மலையாள சினிமா தான் அவ்வளவு அழகான வாய்ப்புகளை கொடுத்தது. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். என்னை எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை. நீங்க அம்மாவாக இருக்கீங்க, கல்யாணம் ஆயிடுச்சு என்று ஒதுக்கி வைக்கவும் இல்லை என்னை குறைத்து மதிப்பிடவும் இல்லை.என் திறமைக்கு தகுந்த மாதிரி நல்ல நல்ல படங்களுக்கான வாய்ப்பு வந்தது. இதற்காக நான் எப்போதும் மலையாள சினிமாவுக்கு நன்றி சொல்லுவேன். தமிழ் சினிமா மேல் கோபம் இருக்கிறது. ஆனாலும் இப்போ கொஞ்சம் பிரண்ட்லியா மாறி இருக்கு. நான் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறேன், டேலண்ட் படியும் என்னை நான் மேலும் மேலும் திறமை வளர்த்துக் கொள்கிறேன். ஆனாலும் நம்முடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத போது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது என்று கனிகா பேசியிருக்கிறார்.கனிகா எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார் என்ற போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருப்பதால் இவருக்கு முக்கிய கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அவரின் கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன