இலங்கை
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் ; விசாரணைகளை தீவிரமாக்கும் பொலிஸார்

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் ; விசாரணைகளை தீவிரமாக்கும் பொலிஸார்
கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாமரை கோபுர வீதியிலிருந்து கடந்த சனிக்கிழமை (21) இரவு வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
60 முதல் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.