Connect with us

பொழுதுபோக்கு

60 ஆண்டுகள் பாரம்பரியம்; காலிங் பெல் இல்ல, வீட்டுக்கு நடுவில் பெரிய மரம்: நடிகர் கிஷோர் ஹோம் டூர் வீடியோ வைரல்

Published

on

Actor Kishore

Loading

60 ஆண்டுகள் பாரம்பரியம்; காலிங் பெல் இல்ல, வீட்டுக்கு நடுவில் பெரிய மரம்: நடிகர் கிஷோர் ஹோம் டூர் வீடியோ வைரல்

தென்னிந்திய சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் கிஷோர். கர்நாடகாவை சேர்ந்த இவர், கடந்த 2004-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாக கிட்னா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, அசோகா, துணியா என பல வெற்றிப்படங்களை கொடுத்த கிஷோர், 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில், செல்வம் என்ற ரவுடி கேரக்டரில் கிஷோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம், உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், ஹரிதாஸ் படத்தில் ஒரு பாசமிகு அப்பாவாக கதையின் நாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான கலியுகம் என்ற படத்தில் கிஷோர் நடித்தார். கடந்த ஆண்டு விடுதலை 2 மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் நடிதம்திருந்தார்.தமிழ் கன்னடா மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் இந்தி என இந்திய சினிமாவின் முன்னணி மொழிப்படங்களில் நடித்து வரும் கிஷோர், பெங்களூருவில் வசித்து வருகிறார். தற்போது அவர் வசித்து வரும் வீடு தொடர்பான ஹோம்டூர் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது, அவள் விகடன் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், கிஷோர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது வீட்டை பற்றி விளக்கி சொல்கின்றனர்.இந்த வீடு 1958-ல் கட்டியது என்று தொடங்கும் கிஷோர், வீட்டில் 4 பேருக்கும் 4 பைக் இருக்கிறது. நானும் எனது மனைவியும் பைக் ரைடு போவோம் என்று சொல்கிறார். அடுத்து நான் கல்லூரி காலத்தில் இருந்தே பைக் ஓட்டுவேன், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன் என கிஷோர் மனைவி சொல்ல, நாமாலாம் சினிமாவில் தான் சண்டை என்று கிஷோர் கலாய்க்கிறார். அதன்பிறகு இந்த வீடு பழைய வீடு, 70-80 களில் கர்நாடகாவில் கட்டிய வீடுகள் அனைத்தும் இப்படித்தான் இருக்கும்.இந்த வீடு 1958-ல் கட்டியது. இந்த வீடு பாரம்பரியம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படியே புதுப்பித்தோம் என்று கிஷோர் கூறியுள்ளார். இந்த வீட்டில், பழங்கால வீடு போன்று உள்ளே திண்னை அமைக்கப்பட்டுள்ளது. ஷோபா, ப்ரிஜ்ச் உள்ளிட்ட பர்னிச்சர்கள் எதுவும் இல்லாத நிலையில், வீட்டுக்கு வெளியிலும், உள்ளேயும் மரங்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக, கிஷோர் தனது வீட்டுக்கு உள்ளே பெரிய மரத்தை வளர்த்து வருகிறார். அதேபோல் கொல்லைபுறத்தில், பலவகையாக பழ மரங்களையும் வளர்த்து வருகிறார். அதேபோல் வீட்டில் காலிங் பெல்லுக்கு பதிலாக கோவில் மணி போன்ற ஒரு சிறிய பெல்லை வைத்துள்ளனர்.வீட்டிற்குள் உள்ளே தண்ணீர் தொட்டி போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மீன்கள் வளர்ப்பதாக கூறியுள்ளார். வீட்டில் இருக்கும்போது, காலையில் இந்த தொட்டிக்கு மேலே அமர்ந்து காலை தண்ணீரில் வைத்தால் மீன்கள் கடிக்கும். இந்த வீட்டில் டிவி, உள்ளிட்ட பர்னிச்சர் சமான்கள் வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் இப்போது பிள்ளைகள் விரும்பியதால், டிவி ஷோபா மட்டும் வாங்கி இருக்கிறோம் என்று கிஷோர் கூறியுள்ளார். பெங்களூரு சிட்டிக்கு நடுவில், இப்படி இயற்கையுடன் கூடிய வீடு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன