Connect with us

இலங்கை

யாழில் இடம் பெற்ற கோர விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி

Published

on

Loading

யாழில் இடம் பெற்ற கோர விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி

யாழ்ப்பாணம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி அருகிலுள்ள பனைமரத்துடன் மோதியதில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இன்று திங்கட்கிழமை (23)அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய் , கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் தனது மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

சம்பவதினமான இன்று அதிகாலை 3.00 கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேகக்கட்டுப்பாட்டை மீறி பணைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயார் மட்டும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதில் உயிரிழந்தவர்களின் சடலம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன