Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்று; 159 பேர் பாதிப்பு

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்று; 159 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மாலை வீசிய பலத்த காற்றுக் காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, யாழ்ப்பாணம் பிரதேசசெயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும். 2 அடிப்படைக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும், ஓர் அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன. வேலணை பிரதேசசெயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த ஏழுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. கோப்பாய்பிரதேசசெயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகு தியளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட் டுள்ளதுடன் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன