இலங்கை
கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும்

கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும்
சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தவிசாளர் தெரிவின்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் செ.மயூரனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு மாறாக அவர் நடுநிலை வகித்தார். இதனாலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, கட்சியின் தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.