Connect with us

பொழுதுபோக்கு

‘மெட்டி ஒலி’ ராஜம்மா ஞாபகம் இருக்கா? 12 வயதில் நடிப்பை தொடங்கியவர்: இப்போது என்ன செய்கிறார்?

Published

on

Metti oli rajamma

Loading

‘மெட்டி ஒலி’ ராஜம்மா ஞாபகம் இருக்கா? 12 வயதில் நடிப்பை தொடங்கியவர்: இப்போது என்ன செய்கிறார்?

இன்றைய காலக்கட்டத்தில் சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பானாலும், சமூகவலைளதங்களின் தாக்கம் இல்லாமல் 90-களில் வெளியான சீரியல்களுக்கும், அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்றாக மெட்டி ஒலி சீரியலில் ராஜம்மா என்ற கேரக்டரில் கலக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகை சாந்தி வில்லியம்ஸ் குறித்து பார்ப்போம்.தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த இவர், 1970-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியாக வியட்நாம் வீடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஜெனரல் சக்ரவர்த்தி, படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்த இவர், மூடுபனி படத்தில், பிரதாப் போத்தனின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். ஜென்டில்மேன், கிழக்கு முகம், சொல்லாமலே, ப்ரண்ஸ், திருமலை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் சாந்தி வில்லியம்ஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.கடைசியாக, 2023-ம் ஆண்டு வெளியாக லாரன்சித் ருத்ரன் படத்தில் நடித்திருந்த சாந்தி வில்லியம்ஸ், மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். 200-ம் ஆண்டு தமிழில் தொடங்கிய சித்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், அடுத்து மருமகள் என்ற சீரியலில் நடித்திருந்தார். ஆனால் சாந்தி வில்லிம்ஸ்க்கு திருப்புமுனை கொடுத்த சின்னத்திரை சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த சீரியல் பலரின் பாராட்டுக்களை பெற்றது.இதில் சரோ கேரக்டரின் மாமியாராக ராஜாம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சற்று வில்லத்தனம் கலந்த கேரக்டர் தான் என்றாலும் கூட, மெட்டி ஒலி சீரியல் சாந்தி வில்லியம்ஸ்க்கு பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று தந்தது. இந்த சீரியலுக்கு பிறகு, அண்ணாமலை, தென்றல், தங்கம், வாணி ராணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்த, சாந்தி வில்லியம்ஸ், சன்.டிவி விஜய் டிவி ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள சாந்தி வில்லியம்ஸ் தற்போது, விஜய் டிவியின் கண்மணி அன்புடன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான ஒரு இந்திய நடிகை நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ், தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் துணை மற்றும் இரண்டாம் கதாநாயகியாக நடித்துள்ளார்.தமிழில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், ஹீரோயினாக இவர் நடிக்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர், மற்றும் இளம் வயதிலேயே வயதான கேரக்டர்களில் நடித்திருந்தவர். பாபநாசம் படத்தில் கௌதமியின் அம்மா கேரக்டரில் நடித்திருந்த இவர், விஜயகாந்தின் நரசிம்மா படத்தில், நாயகியின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன