உலகம்
தென்கிழக்கு உக்ரைனில் விமானத் தாக்குதல் நடத்திய ரஷ்யா – 17 பேர் பலி‘!

தென்கிழக்கு உக்ரைனில் விமானத் தாக்குதல் நடத்திய ரஷ்யா – 17 பேர் பலி‘!
தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேதமடைந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
நெதர்லாந்தில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு உக்ரைன் அதிபர் சென்றிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரஷ்யா மீதான மேலும் தடைகள் குறித்து விவாதிக்க உச்சிமாநாட்டின் போது வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை