இலங்கை
மாகாணத் தேர்தலுக்கான அரசியல் சமர் விரைவில்! எதிர்க்கட்சி தெரிவிப்பு

மாகாணத் தேர்தலுக்கான அரசியல் சமர் விரைவில்! எதிர்க்கட்சி தெரிவிப்பு
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரும் அரசியல் சமரை ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் ஆரம்பிக்கும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; உள்ளூராட்சிசபைத் தேர்தலில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைத்திருந்தால், மாகாணசபைத் தேர்தலையும் அரசாங்கம் உடன் நடத்தியிருக்கும். ஆனால் தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. வெற்றியோ, தோல்வியோ தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயக உரிமையை வெல்வதற்குரிய சில வேலைத்திட்டங்களை நாம் விரைவில் முன்னெடுப்போம் – என்றார்.