Connect with us

இலங்கை

4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர

Published

on

Loading

4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சீனா சென்று நாடு திரும்பியுள்ளார். அமைச்சர் வசந்த சமரசிங்க தற்போது சீனாவில் தங்கியுள்ளார். சீனா சென்ற ரில்வின் சில்வா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் திரும்பியுள்ளார் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் சீனா சென்று திரும்பிய ஜனாதிபதி மீண்டும் சீனா செல்லவுள்ளமை பேசுபொருளாகியிருக்கின்றது.

Advertisement

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, பொருளாதார நெருக்கடி சமயத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சீனா உறுதியளித்திருந்தது. ஆயினும் கோத்தாபய அதைத் தவிர்த்து சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதற்கு முடிவெடுத்தார். அதனால் அந்த நிதி வழங்கப்பட வில்லை. அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 4 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அநுர சீனா செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன