இலங்கை
2 தொன் போதைப்பொருள் கடந்த 5 மாதங்களில் மீட்பு!

2 தொன் போதைப்பொருள் கடந்த 5 மாதங்களில் மீட்பு!
கடந்த 5 மாதங்களில் 2 தொன் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 253 கிலோகிராம் ஹெராய்ன், 2ஆயிரத்து 121 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள், 12 ஆயிரத்து 439 கிலோகிராம் கஞ்சா, 22 கிலோகிராம் கொக்கேய்ன், 1.6 மில்லியன் போதைமாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.