Connect with us

இலங்கை

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்கர் டர்க்!

Published

on

Loading

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்கர் டர்க்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிர் வோல்கர் டர்க்ரின் திருகோணமலை விஜயம் இன்று காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.

அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனவீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்றையதினம் குறித்த மண்டபத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

குறித்த நடவடிக்கையினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு-கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது வேண்டுகோள்களை கேட்டறிந்துகொண்டதுடன் பொதுமக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவரிடம் கையளித்திருந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன