Connect with us

இலங்கை

செம்மணியில் போராட்ட களத்தில் பதற்றம்; மீன்பிடி அமைச்சரும் துரத்தப்பட்டார்

Published

on

Loading

செம்மணியில் போராட்ட களத்தில் பதற்றம்; மீன்பிடி அமைச்சரும் துரத்தப்பட்டார்

  யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.

மதியம் 1 மணி அளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.

Advertisement

இதன் பொழுது போராட்டகாரர்களால் யாழ். மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.

மேலும் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதேவேளை விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார்.

இதேபோன்று அப்பகுதிக்கு சென்ற இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன