Connect with us

இலங்கை

வைத்தியசாலையின் பொறுப்பற்றத்தனத்தால் பலியான இளைஞன் ; தீவிரமாகும் விசாரணைகள்

Published

on

Loading

வைத்தியசாலையின் பொறுப்பற்றத்தனத்தால் பலியான இளைஞன் ; தீவிரமாகும் விசாரணைகள்

திடீர் சுகவீனம் காரணமாக கண்டி – மடுல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

மடுல்கலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2.30 அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மருத்துவமனை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், குறித்த  உயிரிழப்பை அடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மருத்துவமனை வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மடுல்கலை – கிறீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

Advertisement

 இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

குறித்த சடலத்தில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன