இலங்கை
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்காவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்காவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
கொழும்பு ஹேவ்லாக் டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (26.05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்றாவது சந்தேக நபரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை