Connect with us

இலங்கை

யாழில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்; தவிக்கும் குடும்பம்

Published

on

Loading

யாழில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்; தவிக்கும் குடும்பம்

   யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை.

38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை .

Advertisement

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை குறித்த மீனவர் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார்.

வழமையாக 9.00 மணியளவில் கரைசேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை, அவர் பயணித்த கட்டுமரமானது கடலில் மிதந்து வந்துள்ளது.

Advertisement

கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மணல்காடு மீனவர்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன