Connect with us

இலங்கை

அர்ச்சுனா தொடர்ந்தும் எம்பியாக பதவி வகிப்பாரா? நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்து

Published

on

Loading

அர்ச்சுனா தொடர்ந்தும் எம்பியாக பதவி வகிப்பாரா? நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்து

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தொடர்ந்தும் பொது அதிகாரியாக பதவி வகிப்பதாக நீதிமன்றில் அரச தரப்பு தெரிவித்துள்ளது. 

 இது, அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

Advertisement

அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவின் விசாரணையின்போதே, மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தன இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். 

 இதற்கிடையில், மனுதாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். 

 எனவே, இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனது பணியில் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் முறையான அறிவிப்புக்களை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

 இந்தநிலையில் குறித்த விசாரணையின் அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1750976006.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன