Connect with us

இந்தியா

முகவுரையில் ‘சோசலிசம்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தை நீடிக்க வேண்டுமா? விவாதம் தேவை: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பேச்சு

Published

on

RSS Gen Secy Dattatreya Hosabale socialist secular words Preamble Tamil News

Loading

முகவுரையில் ‘சோசலிசம்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தை நீடிக்க வேண்டுமா? விவாதம் தேவை: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பேச்சு

ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, அவசரநிலையை அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், அவசரநிலை நாட்களில் அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்ட “சோசலிசம்” மற்றும் “மதச்சார்பற்ற” வார்த்தைகள் தொடர்ந்து இருக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வார்த்தைகள் நீடிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “அவசரநிலையை கொண்டு வந்தவர்கள் இப்போது தங்கள் கைகளில் அரசியலமைப்பை ஏந்திச் சுற்றி வருகிறார்கள். அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் முன்னோர்கள் இதைச் செய்திருந்தால், அவர்கள் சார்பாக மன்னிப்பு கேளுங்கள். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் முகவுரையில்  சேர்க்கப்பட்டன. பின்னர் அவற்றை நீக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே, அவை நீடிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். நான் இதை பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரிடப்பட்ட கட்டிடத்தில் (அம்பேத்கர் சர்வதேச மையம்) இருந்து சொல்கிறேன், அவருடைய அரசியலமைப்பில் முகவுரையில் இந்த வார்த்தைகள் இல்லை.” என்று அவர் கூறினார். மக்களவைத் தேர்தலின் போது, ​​பல இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பேரணிகளில் அரசியலமைப்பின் நகலை காட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அதை “மாற்ற முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன