Connect with us

சினிமா

கீர்த்திஷெட்டி மீண்டும் தமிழில் ஜொலிக்க தயாரா? ரசிகர்களுக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள்

Published

on

Loading

கீர்த்திஷெட்டி மீண்டும் தமிழில் ஜொலிக்க தயாரா? ரசிகர்களுக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள்

தெலுங்கு சினிமாவில் தனது அழகான நடிப்பு, முகபாவனை என்பன மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. “உப்பேனா” படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு திரையுலகில் அவர் இரண்டாவது ராஷ்மிகா என்றே பேசப்பட்டார். எனினும், தமிழில் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் செல்வாக்கை ஏற்படுத்தவில்லை.தற்போது, ‘வா வாத்தியார்’ மற்றும் ‘LIK’ ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்திக்கு இது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதிய ஆரம்பமாக அமையக்கூடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக இணைந்துள்ளார். படம் முழுக்க பிரமாண்டமான ஆக்‌ஷன், ஜாலியான காமெடி மற்றும் எமோஷன்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.அத்துடன் மிகப் பெரிய ஹிட்டான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் வெகுஜன கவனத்தை பெற்ற பிரதீப் ரங்கநாதன் தன் அடுத்த படமான ‘LIK’-இல் ஹீரோவாக மட்டும் இல்லாமல், இயக்குநராகவும் செயல்படுகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இளைஞர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.கீர்த்தி ஷெட்டி தமிழில் இதுவரை நடித்த படங்கள் நடிப்பு திறமைக்கு போதுமான அளவில் வெளிவராத கதாபாத்திரங்கள், மக்களைக் கவராமை ஆகிய காரணங்களால் பெரிதும் ஓடவில்லை. இதனால், ‘வா வாத்தியார்’ மற்றும்  ‘LIK’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன