Connect with us

இலங்கை

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி ; சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பதிவு

Published

on

Loading

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி ; சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பதிவு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்ப்பாக இன்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Advertisement

ஒரு கைக்குழந்தையை தாய் அணைத்தபடி கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டு பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இங்கே நாம் தவறு விடுகின்றோம் . புதைகுழி நீதிக்காக போராடும் நாங்கள் இவ்வாறான விடயங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

எந்த அடிப்படையில் தாய் கைக்குழந்தையை அணைத்தபடி கொலை செய்யப்பட்டு புதைக்கப்படுள்ளார் என்று வெறும் எலும்புக்கூட்டின் புகைப்படத்தை வைத்து நீங்கள் முடிவுக்கு வருவீர்கள் ??
துறை சார்ந்த நிபுணர்கூட இன்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஆணா அல்லது பெண்ணா அல்லது குழந்தையா என்ற முடிபுக்கு வரவில்லை அதை உடனடியாகவும் கூற முடியாது ஆய்வுகளின் பின்னரே கூற முடியும்.

Advertisement

இன்று புதைகுழி அகழ்வை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்கள் யாரும் இவ்வாறு அறிக்கையிடவும் இல்லை , சிலவேளை நீங்கள் குழந்தை என்று கருதும் எலும்புக்கூடு வயதில் பெரிய ஆனால் உருவத்தில் மிகவும் சிறிய ஒரு மனிதனுடையதாகவும் இருக்கலாம்

ஆகவே எந்த அடிப்படையில் இன்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தாயும் சேயும் என்று உங்கள்பாட்டுக்கு முடிவுக்கு வந்து வலைத்தளங்களில் உங்கள் வசதிக்கு எழுதி தள்ளுவீர்கள் ?

இது மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய விடயம் (Sensitive issue ) உண்மைக்கும் நீதிக்குமாக போராடும் நாம் இவ்வாறான விடயங்களில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.

Advertisement

அண்மையில் ஒரு புகைப்படத்தை பலரும் பகிர்ந்து அகழ்வில் ஈடுபடுபவர்கள் சிரித்து கொண்டிருப்பதாக அவர்களை வட்டமிட்டு தங்களது ஆத்திரங்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதுவும் மிகவும் தவறான செயற்பாடு, இதுவரை அகழ்வில் ஈடுபடுபவர்கள் மீட்க்கப்படும் எலும்புக்கூடுகளுக்கு உரிய மரியாதையை வழங்கி மிகவும் கண்ணியமான முறையில் அகழ்வில் ஈடுபடுகின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயமே,

அகழ்வு நடவடிக்கை ஒருநாளைக்கு அண்ணளவாக 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெறுகிறது இதன்போது அவர்கள் தமக்குள்ளே பேசிக்கொள்வார்கள் அதன்போது அவர்களின் ஒளிப்படத்தில் வந்திருக்கலாம் இதை வைத்து அவர்களை இவ்வாறு பேசுவது சரியான விடயமான கேட்டு இப்பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன