இலங்கை
யாழ்ப்பாணம் நல்லூரில் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

யாழ்ப்பாணம் நல்லூரில் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை
2026 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பாவனைமுற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சபை அமர்வில், உப தவிசாளர் இ. ஜெயகரன் முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில், இந்தத் தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமன ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.