இலங்கை
சந்தேக நபரை தேட பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

சந்தேக நபரை தேட பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்
இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர், 2012 ஆம் ஆண்டில் சிசிரிவி கமரா ஒன்றில் பதிவாகிய காணொளியிலிருந்து பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிசிரிவி கமராவில் பதிவாகிய காணொளியில் இருந்த சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071 – 8594917 , 071 – 8591758 , 011 – 2422176 அல்லது 011 – 2391529 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.