Connect with us

இலங்கை

யாழ். புகையிரதக் கடவை அபாய நிலையில் குறித்து அச்சத்தில் மக்கள்

Published

on

Loading

யாழ். புகையிரதக் கடவை அபாய நிலையில் குறித்து அச்சத்தில் மக்கள்

யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவை மிகவும் அபாயமான நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

கொடிகாமம் இராமாவில் முருகன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள புகையிரதக் கடவையே இவ்வாறு காணப்படுகின்றது.

Advertisement

குறித்த புகையிரதக் புகையிர்தக் கடவையில் இரு மருங்கிலிலுமுள்ள பாதுகாப்புக் கம்பங்கள் காணப்படாத அதேவேளை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடவைக் காப்பாளர் கடமையில் ஈடுபடவில்லை எனவும் இதனால் பெரும் விபத்துக்கள் சம்பவித்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது மக்கள் மிகுந்த அச்சத்துடனேயே குறித்த புகையிரதக் கடவையை கடக்கும் நிலையே காணப்படும் அதேவேளை விபத்து ஒன்று சம்பவிக்க இருந்த நிலையில் அப்பகுதியில் நின்ற மக்களின் விரைந்த செயற்பாட்டால் அது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான சி.பிரபாகரன், செ,மயூரன் ஆகியோரிடம் மக்கள் விடயத்தை தெரியப்படுத்தியிருந்தனர்.

Advertisement

இதையடுத்து பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் குறித்த புகையிரதக் கடவையை பார்வையிட்டுள்ளனர்.

ஆகவே புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாகக் கவனமெடுத்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்ப்படுவதற்கு முன் குறித்த கடவைக்கு காப்பாளரை விரைவாகக் கடமையில் ஈடுபடுத்தி விபத்துக்களை தடுத்து மக்களை பாதுகாக்குமாறும் மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன