இலங்கை
ஹெரோய்னுடன் கைதானோருக்கு விளக்கமறியல்

ஹெரோய்னுடன் கைதானோருக்கு விளக்கமறியல்
கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட இரு வேறு பகுதிகளில் ஹெரோய்ன் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று யாழ்ப் பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.