இலங்கை
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்ரெம்பருக்கு முன் நீக்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்ரெம்பருக்கு முன் நீக்கம்
ஐ.நாவை சமாளிக்க அரசின் திட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்றும், நிகழ்நிலை காப்புச்சட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அறியமுடிகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் மீளாய்வு அறிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு பங்கேற்கவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.