Connect with us

இலங்கை

ஒரே பாடசாலையில் மூன்று மாணவிகள் துஸ்பிரயோகம்; ஆடம்பர வீட்டில் அரங்கேறிய சம்பவம்

Published

on

Loading

ஒரே பாடசாலையில் மூன்று மாணவிகள் துஸ்பிரயோகம்; ஆடம்பர வீட்டில் அரங்கேறிய சம்பவம்

ஒரே பாடசாலையில் படிக்கும் மூன்று மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளதாக களுத்துறை -மொரகஹஹேன பொலிஸார் கூறுகின்றனர்.

கைதான சந்தேக நபர் 30 வயதான திருமணமானவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Advertisement

16 வயது சிறுமியை பாடசாலைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அந்த மாணவிக்கு உதவுவதாகக் கூறி தனது காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவளுடன் நட்பு கொண்டுள்ளார்.

அதன் பின்னர், மதியம் யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு மதியவேளையில் அழைத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம், ஒரு வருடத்திற்கு முன்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Advertisement

இதனையடுத்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, இந்த மாணவி தான் படிக்கும் அதே பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அழைத்து, தன்னிடமிருந்த சந்தேகநபரின் புகைப்படத்தைப் பார்க்கச் சொல்லியுள்ளார்.

அதன்படி, 16 வயது சிறுமி, 13 வயது சிறுமியின் தாயாரின் அலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் சந்தேக நபரின் புகைப்படத்தை அனுப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை (27) ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். சந்தேக நபருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த 13 வயது சிறுமி, இது குறித்து தனது தோழியிடம் தெரிவித்து, அவளுடன் தனது காதலனைச் சந்திக்கச் செல்ல ஒப்புக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

அங்கு, சந்தேக நபர் இரண்டு சிறுமிகளையும் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை கடத்துவதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், சந்தேக நபர் பயன்படுத்திய ஸ்மார்ட்போனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார்.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன