Connect with us

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது

Published

on

Loading

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது

  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

Advertisement

கைதான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணனிகள் மற்றும் 238 கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களின் மொத்த பெறுமதி 6 கோடி ரூபாவுக்கும் அதிகம் ஆகும்.

Advertisement

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன