இலங்கை
தேயிலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தால் பரபரப்பு

தேயிலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தால் பரபரப்பு
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.