Connect with us

இலங்கை

குடும்பத்தலைவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு; வவுனியாவில் சம்பவம்!

Published

on

Loading

குடும்பத்தலைவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு; வவுனியாவில் சம்பவம்!

வவுனியா சமயபுரம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணொருவரையும் மற்றும் அவருடைய தாயாரையும் கத்தியால் குத்திவிட்டு கிணற்றுக்குள் குதித்த நிலையிலேயே அந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் வவுனியா  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தாக்குதலுக்கு இலக்கான பெண்,அந்தக் குடும்பத்தலைவருடன் கடந்த சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்தவர் என்று அந்தப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் இதற்கு முன்னர் வெவ்வேறு திருமணங்களை முடித்திருந்தனர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன