இலங்கை
செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமச்சரவைப் பேச்சாளரும் அமச்சருமான நளிந்த ஜயதிலஸ் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று ஊடகவியலாளர்கள் வினவியபோது, அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- செம்மணிப்புதைகுழி விவகாரம் தொடர்பில் ஜுன் 29ஆம் திகதி வழக்கு விசாணை இடம்பெற்றது. அரச தரப்பிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தாலும் நீதியமைச்சாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. செம்மணிப் புதைழி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். வழக்கு விசாரணை இடம்பெறுவதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது- என்றார்.