Connect with us

இலங்கை

தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு

Published

on

Loading

தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் உங்கள் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது.

Advertisement

டிசம்பர் 15, 2024க்குப் பிறகு, தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்கள் ஓட்ட முடியாது, மேலும் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்கும்.

தற்காலிக இலக்கத் தகடுகளுடன் வாகனம் ஓட்டுவதற்கு இதுவரை உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 15, 2024 அன்று இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன