இலங்கை
பொலிஸ் உத்தரவை மீறிய மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு

பொலிஸ் உத்தரவை மீறிய மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு
நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று காலை கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.